திருக்குறள்
இயல் : அரசியல்
அதிகாரம்:50.இடன் அறிதல்
குறள் எண்:496
குறள்:
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
பொருள்:
வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.
Perseverance kills the game
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி :
“அன்பாகப் பேசும் வார்த்தைகள் ஒருவரின் நாளையே மாற்றிவிடும். கல்வி என்பது வாழ்க்கையையே மாற்றும்”
Thought for the Day :
Alzheimer’s Day: “Remember the person, not just the memory.”
பொது அறிவு :
1. தமிழ்நாட்டில் உள்ள டவுன் பஞ்சாயத்துகள் எத்தனை?
490 .
2. தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகள் எத்தனை?
12,525.
English words :
1. Pragmatic** – Practical – நடைமுறைசார்ந்த
2.**Candid** – Frank – வெளிப்படையான
புவியியலும் சுற்றுசூழலும் :
இது பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குகிறது. உள்ளூர் வளர்ச்சிப் பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்துகிறது. பேரூராட்சியில் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களிலிருந்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
NMMS :
MAT
தென்மேற்கு' வடக்காகவும், 'கிழக்கு' தென்மேற்காகவும் மற்றும் அனைத்து திசைகளும் இதே முறையில் மாற்றம் பெற்றால் வடக்கு என்னவாக மாறும்?
(1) வடகிழக்கு
(2) வடமேற்கு
(3) தென்மேற்கு
(4) தென்கிழக்கு
விடை: (4) தென்கிழக்கு
செப்டம்பர் 18
நீதிக்கதை
பொறுமையே பெரும் பலம்
கோவையில் ஒரு சிறிய வீட்டில் ரவி, அவரது மனைவி லதா, மகள் நிவ்யா, மகன் நிரஞ்சன் ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். நிவ்யா மிகவும் திறமையான பெண். ஆனால், அவளுக்கு ஒரு சிறிய குறை இருந்தது. எந்த விஷயம் நடந்தாலும் உடனே கோபப்பட்டு, அவசரமாக முடிவு எடுக்கும் பழக்கம் அவளுக்கு இருந்தது.
ஒருநாள் மாலை, லதா சமையலறையில் இருந்தபோது வீட்டில் வைத்திருந்த ஒரு முக்கியமான பொருள் காணாமல் போனது. அதைத் தேடியபோது, நிவ்யாவின் அறையில்தான் கடைசியாக பார்த்ததாக நினைவுக்கு வந்தது.
“நிவ்யா, நீ எடுத்தாயா?” என்று லதா கேட்டார்.
“நான் எடுக்கவே இல்லை! என்னை ஏன் எப்போதும் சந்தேகப்படுகிறீர்கள்?” என்று நிவ்யா கோபமாகக் கூறினாள்.
அவளது கோபத்தைப் பார்த்த ரவி, “நிவ்யா, முதலில் அமைதியாக இரு. நாம் பொறுமையாகத் தேடிப் பார்ப்போம். அவசரப்பட்டு அம்மாவை எதிர்த்து பேசக்கூடாது,” என்றார்.
ஆனால் காவியா கேட்காமல் அறைக்குள் சென்று மிக வேகமாக கதவைச் சாத்திக்கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து நிரஞ்சன் பள்ளிப் பையை எடுத்துக்கொண்டு வந்தான். அப்போது அந்தப் பொருள் அவன் பள்ளிப் பைக்குள் தவறுதலாக இருப்பது தெரியவந்தது.
அன்று காலை அவசரமாகப் பொருட்களை எடுத்தபோது, அவன் தெரியாமல் அதைத் தனது பையில் வைத்திருந்தான்.
இதைக் கண்ட நிவ்யா மிகவும் வருத்தப்பட்டாள்.
“அப்பா, இந்தப் பொருள் நிரஞ்சனையின் பையில்தான் இருந்திருக்கிறது. என்னிடம் இல்லை என்பதை நான் அம்மாவிடம் பொறுமையாக சொல்லி இருக்க வேண்டும். உடனே கோபப்பட்டதால் அம்மாவையும் உங்களையும் வருத்திவிட்டேன்,” என்று கூறினாள்.
ரவி சிரித்துக்கொண்டே, “வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் நினைப்பது தவறாக இருக்கலாம். ஒரு பிரச்சினை வந்தவுடன் கோபப்படாமல், சிறிது நேரம் அமைதியாக இருந்து சிந்தித்தால் உண்மை நமக்குத் தெரியும். பொறுமை இருந்தால் பல பிரச்சினைகளை எளிதாகத் தீர்க்கலாம்,” என்றார்.
அன்று முதல் நிவ்யா எந்த விஷயம் நடந்தாலும் உடனே கோபப்படாமல், முதலில் அமைதியாக யோசித்து பின்னர் செயல்படத் தொடங்கினாள்.
நீதி:
எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் சிந்தித்து செயல்பட்டால், பல பிரச்சினைகளைத் தவிர்த்து நல்ல முடிவை அடையலாம்.
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி