ஏப்.,24ல் துவங்குகிறது 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2012

ஏப்.,24ல் துவங்குகிறது 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி.

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, ஏப்., 24ல் துவங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.,4 ல் துவங்கி நடந்து வருகிறது. ஏப்., 23 ல் நிறைவு பெறுகிறது. இதில், 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிந்த மறுநாளே விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்களில் நடக்கவுள்ளது. ஏப்., 24 ல் மாவட்ட கல்வி அதிகாரிகள் விடைத்தாள் திருத்தும் செய்யும் முகாம் பொறுப்பாளர்களாக பணி ஏற்பர். அப்போது விடைத்தாள்களின் கட்டுகளை பெற்று விடைத்தாள் திருத்தம் செய்ய ஏதுவாக, முதல்கட்ட பணிகளை செய்வர். ஏப்., 26 ல் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவர். 27 ல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி