மண்ணரை மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு, தன்னுடைய சொந்த பணத்தில், ஒருவர், கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளார்.அதை இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வராததால், அப்பள்ளி மாணவ, மாணவியர், ரோட்டோரத்தில், மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கின்றனர்.திருப்பூர், மண்ணரை பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. 145 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். போதுமான வகுப்பறை இல்லாததால், பாதுகாப்பு இல்லாமல், சாலையோரத்தில், மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கின்றனர். தேர்வு நேரங்களில்,மாணவர்கள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதும் அவலமும் நீடித்து வருகிறது.பலத்த மழை பெய்தால், பள்ளிச்சுவர் இடிந்து விழக்கூடிய அபாயமும் உள்ளது. மதிய நேரம் உணவருந்த மாணவர்கள், சாலையோரமுள்ள இடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில், சாலையோரம் இப்பள்ளி இயங்கி வருவது, மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்கு, கேள்விக்குறியாக உள்ளது.இப்பள்ளியின் அவல நிலையை பார்த்து, சமூக ஆர்வலர் ஒருவர், தன்னுடைய செலவில் இடம் வழங்கி, அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறையை, கிருஷ்ணசாமி-புஷ்பாவதி மாநகராட்சி நினைவு பள்ளி என்ற பெயரில், கட்டிக் கொடுத்துள்ளார். வகுப்பறையை கட்டி முடித்து 10 மாதங்களாகியும் இன்று வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. அதனால், மாணவ, மாணவியரின் மரத்தடி கல்விதொடர்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி