தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2013

தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை.

தமிழகத்தில் 1.6.2006 ஆம் ஆண்டுக்கு முன் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை செய்ய வேண்டும் என,
முதல்வருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.இக்கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை மதுரையில் மாநிலத் தலைவர் பி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத் தீர்மானங்கள் வருமாறு:1.6.2006-க்கு முன் பல்வேறு காலங்களில் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களைபணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறைப்படுத்திட முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழையஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். சமூக அறிவியல் பாடத்துக்கு 7 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.தேர்வு பணிகளுக்கு வழங்கிடும் உழைப்பூதியத்தை இருமடங்காக உயர்த்தி வழங்க வேண்டும். பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்குபி.எட். பட்டம் பெற்ற நாள் முதல் பணிமூப்பு கணக்கிட்டு, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.கோடை விடுமுறை காலங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, அந்நாள்களை ஈடுசெய்யும்விடுப்பாக வழங்கிட வேண்டும்.விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணியமர்த்தப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான தினப்படி வழங்க வேண்டும். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணி நிலையில், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.முதுகலை ஆசிரியர் நேரடி நியமனம் வழங்கிடும் முன்பாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாகவுள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.பட்டதாரி ஆசிரியர்களை கற்பித்தல் பணி தவிர பிற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டங்களை கல்வி மாவட்ட மற்றும் வருவாய் மாவட்ட அளவில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி