முதுகலை ஆசிரியர் தேர்வு: காரைக்குடி ஆசிரியர் 2ம் இடம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2013

முதுகலை ஆசிரியர் தேர்வு: காரைக்குடி ஆசிரியர் 2ம் இடம்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், காரைக்குடியை சேர்ந்த ஆசிரியர் மூர்த்தி, ஆங்கிலத்தில், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து
சாதனை படைத்தார்.ஆசிரியர் தேர்வு வாரியத்தால், கடந்த ஜூலை 21ம் தேதி, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வணிகவியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு, முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. தமிழை தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.ஆங்கில பாடத்தில், காரைக்குடி கழனிவாசலை சேர்ந்த மூர்த்தி என்பவர் 150க்கு 102 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர் தற்போது, ராஜராஜன் பொறியியல் கல்லூரியில், பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி