குரூப் - 2 தேர்வு எழுத திருநங்கைக்கு அனுமதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2013

குரூப் - 2 தேர்வு எழுத திருநங்கைக்கு அனுமதி.


குரூப் - 2 தேர்வு எழுத, மதுரையைச் சேர்ந்த, திருநங்கைக்கு, ஹால் டிக்கெட் அளிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.மதுரையைச் சேர்ந்த,
சொப்னா, செல்வி, கிரேஷ் பானு உள்ளிட்ட, ஐந்து திருநங்கைகள்,உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருநங்கைகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 3 சதவீத ஒதுக்கீடு அளிக்க வேண்டும். குரூப்-2 தேர்வு எழுத சொப்னாவுக்கு இதுவரை ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை. அவரை, தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டது.இம்மனு, தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், வழக்கறிஞர் நிறைமதி ஆஜராகி, தேர்வு எழுத அனுமதித்து, சொப்னாவுக்கு, ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான நகலை தாக்கல் செய்கிறேன், என்றார்.இதையடுத்து, பிரதான மனுவுக்குப் பதிலளிக்க, அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.விசாரணையை, டிச., 18ம் தேதிக்கு, முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.

1 comment:

  1. thiunangaikalukkum sama urimai alikkappada vendum avangalum manithargak thane

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி