அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்ட். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2013

அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்ட்.


ஒழுங்கீனமாக செயல்பட்டதாக, ஊத்துக்குளி அரசு பள்ளி மாணவர்கள் ஆறு பேர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.திருப்பூர் அருகே உள்ள, ஊத்துக்குளி ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள்
ஆறு பேர், 22ம் தேதி, பஸ்சில் சென்றபோது தகராறு ஏற்பட்டு மோதிக் கொண்டதோடு, பள்ளியிலும் அடிதடி தகராறில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக, தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தார். அதன்படி, தகராறில் ஈடுபட்ட ஆறு மாணவர்களையும், முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி