தற்காலிக தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் கோருகின்ற கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2013

தற்காலிக தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் கோருகின்ற கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம்.


தமிழகத்தில் செயல்படுகின்ற சிறுபான்மை,சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளுக்கு உயர்நிலை பிரிவுகள்6முதல்10மற்றும் மேல்நிலை பிரிவுகள்11, 12வகுப்புகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம்,ஆரம்ப அங்கீகாரம்
கோருகின்ற கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம் சென்னையில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட அரங்கில் விரைவில் நடைபெற உள்ளது.இந்தநிலையில் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரம் தொடர்பான கருத்துருக்களை வரும் டிசம்பர்3ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும்,மாவட்ட கல்வி அலுவலர்கள் இதனை டிசம்பர்10ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் கடுமையான நிபந்தனைகள் தற்போது பின்பற்றப்படுகின்றன.

இது தொடர்பாக கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:பள்ளிக்குரிய இடம் யாருடைய பெயரில் உள்ளது,வாடகை அல்லது குத்தகை எனில்30ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் இணைக்கப்பட வேண்டும்.

இடம் அறக்கட்டளைக்கு சொந்தமாக இருப்பினும் அது பள்ளிக்கு எழுதிக்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். பள்ளியை விட்டு தனியே வெளியில் இருந்தால் மாணவர்கள் எவ்வாறு மைதானத்திற்கு அழைத்து செல்லப்படுவர் என்ற விபரம் தெரிவிக்க வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளின் அங்கீகாரத்தின் அடிப்படையில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா,அதில் மாற்றம் ஏதும் இல்லை என்று முதன்மை கல்வி அலுவலர் சான்று வழங்கி இருக்க வேண்டும். வருவாய் துறையின் கட்டிட உரிமை சான்று,மாவட்ட கலெக்டரால் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரின் உறுதிதன்மை சான்று அவசியம்.பள்ளியில் இனி வரும் காலங்களில் கூரை,ஓடுவேய்ந்த கட்டிடங்கள் கட்டப்படமாட்டாது என பள்ளி செயலாளர் அல்லது தாளாளர் உறுதிமொழி அளிக்க வேண்டும். மேலும் இயற்கை சீற்றங்களால் மாணவர்களின் உயிருக்கு பாதிப்பு தரக்கூடி அம்சங்கள் பள்ளியில் இல்லை,இடிந்த சுவர்கள்,மூடப்படாத கிணறுகள்,திறந்த வெளியில் மின்சார இணைப்புகள்,விஷப்பூச்சிகள் போன்றவை பள்ளி வளாகத்தில் இல்லை என்பதை உறுதி செய்து சான்று வழங்க வேண்டும்.ஆரம்ப அங்கீகாரம் பெற வேண்டும் எனில்5கி.மீ சுற்றளவில் உள்ள பள்ளிகளிடம் தடையின்மை சான்று வழங்க வேண்டும் என்பது உட்பட38வகையான அம்சங்களை நிறைவு செய்து அதற்கான சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி