பிளஸ் 2, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவிய ஆசிரியர் மூலம் பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2013

பிளஸ் 2, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவிய ஆசிரியர் மூலம் பயிற்சி.


பிளஸ் 2, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் உள்ள படங்களை வரைய, ஓவிய ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ்2 மாணவர்களுக்கு,
டிச.,10, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச.,12 பிளஸ்2 மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது. இத்தேர்வு ரிசல்ட் அடிப்படையில், அரசு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

விடைத்தாளில் உள்ள குறைகளை மாணவர்களிடம் சுட்டிகாட்ட வேண்டும். மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களை தரம் பிரித்து, பாடவாரியாக சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்."புளு பிரின்ட்' படி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தினமும் ஐந்து, ஐந்து வினாக்களாக பிரித்து படிப்பதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். வரலாறு, புவியியல் பாடங்களுக்கு வரைப்பட பயிற்சி அளிக்க வேண்டும்.

மாணவர்களை சிறு, சிறு குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும், பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும்.மந்தமான மாணவர்களுக்கு மாலைநேர சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் உள்ள படங்களை ஓவிய ஆசிரியர் மூலம் பயிற்சி அளிக்க வேண்டுமென, உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி