ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்காக வகுப்பறைகளுக்கு பெரிய அளவில் இந்தியவரைபடம் உள்பட 3 வரைபடங்கள் பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2013

ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்காக வகுப்பறைகளுக்கு பெரிய அளவில் இந்தியவரைபடம் உள்பட 3 வரைபடங்கள் பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு.


வகுப்புகளுக்கு பெரிய அளவில் வரைபடங்கள் அந்த வரிசையில் புதிதாக வகுப்புநடத்தும் ஆசிரியர்களுக்கு இந்திய வரைபடம், தமிழ்நாடு வரைபடம், அந்த அந்த மாவட்ட வரைபடம் பெரிய
அளவில் கரும்பலகை அருகே போடும் அளவுக்கு வழங்கப்படஉள்ளது. அவை அனைத்தும் அரசியல் வரைபடம் ஆகும். இந்த வரைபடம் வள வளப்பான தாளில் கிழிபடாத அளவுக்கு சிறப்பாக தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அச்சடிக்கப்பட உள்ளது.

இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட்டு அச்சடிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றிற்கு வகுப்புக்கு 3 வரைபடம் வழங்கப்பட உள்ளது. பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு மொத்தம் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்புகளுக்கு மொத்தம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 741 வரைபடங்கள் இந்த பிப்ரவரி மாதத்திற்குள் விநியோகிக்கப்பட இருக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி