பள்ளிகளில் கணினி உண்டு.... மின்சாரம் இல்லை... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2013

பள்ளிகளில் கணினி உண்டு.... மின்சாரம் இல்லை...


நாட்டின் பெரும்பான்மையான துவக்கப் பள்ளிகளில், கம்ப்யூட்டர்கள் உள்ளன; ஆனால் கம்ப்யூட்டர் வழங்கப்பட்ட பெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டரை இயக்க மின்சாரம் இல்லை என கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக தேசிய பல்கலைக்கழகம்
தெரிவித்துள்ளது.துவக்கப் பள்ளிகளுக்கு எளிதில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டு விடுகின்றன. ஆனால், அந்த கம்ப்யூட்டர்களை இயக்க அந்தப் பள்ளிகளுக்கு, மின்சாரம் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளதாக கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முதல்வர், நிதிஷ்குமார் தலைமையிலான, பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள துவக்கப் பள்ளிகளில் 4.80 சதவீதம் பள்ளிகளில் தான் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு, கம்ப்யூட்டர் வழங்கப்பட்ட பள்ளிகளில்28.13 சதவீத பள்ளிகளில், மின்சார வசதி கிடையாது என்பது அந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த முதல்வர், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் மாநிலம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர் தருண் கோகாய் தலைமையிலான அசாம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான திரிபுரா மாநிலத்தில், 80 சதவீத பள்ளிகளுக்கு மின் இணைப்பு கிடையாது.ஆனால் அந்தப் பள்ளிகளில், 74 சதவீத பள்ளிகளுக்கு, கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர் சித்தராமைய்யா தலைமையிலான, கர்நாடக மாநில அரசில் 81 சதவீத துவக்கப் பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில், 96 சதவீத கம்ப்யூட்டர்கள் பள்ளிகளில் மின் இணைப்பு இல்லாததால், முடங்கிக் கிடக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி