குரூப் - 1 தேர்வு: வயது வரம்பினை உயர்த்த தேர்வர்கள் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2013

குரூப் - 1 தேர்வு: வயது வரம்பினை உயர்த்த தேர்வர்கள் கோரிக்கை.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும் குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, குரூப் - 1 தேர்வுக்கான
வயது வரம்பு உயர்த்துவோருக்கான சங்கம் சார்பில் வெங்கடேசன், ரிச்சர்டு, பிரியா, ராமநாதன், அருள்மொழி, சுமதி ஆகியோர் சென்னையில் அளித்த பேட்டி:

"டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் - 1 போட்டித் தேர்வை எழுத பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 30; பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு வயது வரம்பு 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2001 முதல் 2013 வரை 12 ஆண்டுகளில் ஐந்து முறை மட்டுமே குரூப் - 1 தேர்வுகள் நடந்து உள்ளன. குரூப் - 1 தேர்வு அறிவிப்பில் இருந்துபணி நியமனம் வரை மூன்று ஆண்டுகள் ஆகின்றன.இதில், ஒருவர் ஒரு முறை வாய்ப்பை இழக்கும் பட்சத்தில் மூன்று ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் பலர் தேர்வுக்கான வயது வரம்பை கடந்துவிடுகின்றனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் போல டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தொடர்ச்சியாக தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. சில நேரங்களில் மிகக் குறைவான காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.குரூப் - 1 போட்டித் தேர்வுகளை கிராமப்புறங்களைச் சேர்ந்த 50 சதவீதம் பேர் எழுதுகின்றனர். குறைந்த வயது வரம்பால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதே நேரம் குஜராத், ஆந்திரா, கர்நாடகா, அரியானா, மேற்கு வங்கம், அசாம், திரிபுரா மாநிலங்களில், வயது வரம்பு, அனைத்து பிரிவினருக்கும் 45 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனவே, தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கு 35 என்றும் மற்ற பிரிவினருக்கு 40 என்றும் வயது வரம்பை உயர்த்த வேண்டும்." இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி