எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவ முறை அமலாகுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2013

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவ முறை அமலாகுமா?


எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவமுறை அமல்படுத்துவது தொடர்பாக, இன்னும்இறுதி முடிவு எடுக்காததால், ஆசிரியர், மாணவர்மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவகல்வி முறை அமலில் உள்ளது. பாட திட்டத்தை மூன்றாகபிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாக, அக,புற மதிப்பீட்டின்படி தேர்ச்சி கணக்கிடப்படுகிறது. அகமதிப்பீட்டின் படி, மாணவரின் தனித்திறனுக்கு, 40மதிப்பெண்ணும், எழுத்து தேர்வுக்கு, 60 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. இதில், 91 முதல் 100 வரை மதிப்பெண்பெற்றால், 'கிரேடு' ஏ-1, 81 முதல் 90 வரை, ஏ-2; 71 முதல்80 வரை பி-1; 61 முதல் 70 வரை, பி-2; 51 முதல் 60 வரை,சி-1; 41 முதல் 50 வரை, சி-2; 20 மதிப்பெண்ணுக்கு கீழ்எடுக்கும் மாணவர்களுக்கு, இ-2 என, 'கிரேடு'வழங்கப்படுகிறது.படிப்படியாக, 10ம் வகுப்பிற்கும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப் படும் என,அறிவிக்கப்பட்டது. ஆனால்,10ம் வகுப்பிற்கு, முப்பருவமுறையை அறிமுகப்படுத்துவதில்,பல குழப்பங்கள்,தேர்வு குறித்த சிக்கல்கள் இருப்பதாக மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்கள், கல்வியாளர்கள்கருத்து தெரிவிக்கின்றனர்.

இதனால், பள்ளி கல்வித்துறை சார்பில், பல்வேறு கட்ட ஆய்வுகள்,ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு,அரசு ஒப்புதலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டாலும்,பொதுத்தேர்வு முறையிலேயே, தேர்வு நடத்த வேண்டும்என, பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதாவிடம்கேட்டதற்கு, ''எஸ்.எஸ்.எல்.சி.,மாணவர்களுக்கு முப்பருவமுறையை நடைமுறைப்படுத்துவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது. முடிவு மேற்கொள்ளப்பட்டதும் அறிவிப்பு வெளியாகும்,'' என்றார்.மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், ''முப்பருவ முறை அமல் தொடர்பான கருத்துரு, அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், புத்தகங்கள் அச்சிடப்படும். ஏழு மாதம் அவகாசம் இருப்பதால், புத்தகங்கள் அச்சிடுவதில்பிரச்னைகள் இருக்காது,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி