தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை: தேர்வானவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2013

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை: தேர்வானவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு.


தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான 10,500 உறுப்பினர்களை 31 மாவட்டங்கள் மற்றும் 6 மாநகரங்கள் வாரியாக தேர்வு செய்ய, 1,37,120 விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால், 37 தேர்வு மையங்களில் நவ.10 அன்று
எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் பதிவெண்கள் மற்றும் மதிப்பெண்கள் இக்குழும இணையதளம் www.tnusrb.tn.gov.in மற்றும் காவல்துறை இணையதளம் www.tnpolice.gov.in ல் 12.12.2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் அடுத்த கட்டத் தேர்வான உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டிகள், மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றில் கலந்து கொள்ளத் தகுதி உடையவர் ஆவார்கள். இத்தேர்வுகளில் கலந்து கொள்ள இவர்களுக்கு அழைப்புக் கடிதம் விரைவில் அனுப்பப்படும். 26.12.2013 வரை அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் அவர்கள் விண்ணப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் / காவல் துணை ஆணையாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அழைப்புக் கடிதத்தில் நகலினைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும அலுவலக தொலைபேசி எண் 044-28413658 ல் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்- இவ்வாறு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும காவல்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி