முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில், 50 சதவீத இடங்களை தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சென்னையில் நடந்தது.
சங்க தலைவர், தியாகராஜன் தலைமை தாங்கினார்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்; 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; பள்ளி கல்வித் துறையில், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் போது, 50 சதவீத இடங்களை, அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் கோஷம் போட்டனர்.மாநிலம் முழுவதிலும் இருந்து 3,000த்திற்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை, தமிழக அரசு பரிசீலனை செய்யாவிட்டால், பொதுக்குழுவை கூட்டி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம் என தியாகராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி