ஆசிரியர்களிடம் ஆர்வம் இல்லாததால், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நில வரைப்பட நூல் (அட்லஸ்) பயன்படுத்தப்படாமல் உள்ளது.அரசு மற்றும்
உதவிபெறும்பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 55.67 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு, இலவசமாக "அட்லஸ்' வழங்கப்பட்டது. இதன்மூலம் அட்சரேகை, தீர்க்கரேகை, நிலவரைப்படம் அளவைகள், திசைகள், புவியியல் கலைச்சொற்கள், வரைப்படம் வகைகள், நேரம் கணக்கிடல் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.இவற்றை கற்பிப்பதற்கு, சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டன. ஆனால், இந்த "அட்லஸ்'யை பயன்படுத்தி, மாணவர்களுக்கு கற்பிக்க, ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.இதுகுறித்து வந்த புகாரை அடுத்து, பள்ளிகளில் "அட்லஸ்' பயன்பாடு குறித்து, ஆய்வுசெய்து அறிக்கை அனுப்புமாறு, மாவட்ட கல்வி அலுவலர்கள்,மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிலையம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி