பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் கல்வித் தகுதி குறித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2014

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் கல்வித் தகுதி குறித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.


தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் யுஜிசி விதிமுறைகளின் அடிப்படையில் தகுதியானவர்களை துணை வேந்தர்களாக நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் எஸ்.கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சிபாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் யுஜிசியின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக அரசுக்கும் கடிதம் எழுதினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தற்போது இந்த 3 பல்கலைக் கழகங்களிலும் துணை வேந்தர் பதவியிடம் காலியாக உள்ளது.எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்களிலும் துணை வேந்தர் நியமனத்தில் உரிய வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் வைகை, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சோமய்யாஜி, அரசு வக்கீல் பி.சஞ்சய்காந்தி ஆஜராகினர்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு:பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தேர்வு, வெளிப்படையான முறையிலேயே நடந்துவருகிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனித்தனியான ஆய்வுக் குழு உள்ளது என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. யுஜிசி சார்பில் ஆஜரான வக்கீல், யுஜிசி கொண்டுவந்துள்ள விதிகள் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும். எனவே, இந்த விதி தொடர்பாக உரிய உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று வாதிட்டார்.மனுவில் கூறப்பட்டுள்ள 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை நியமிப்பதற்கான ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கல்வித் தகுதிஉள்ளிட்ட விஷயங்களில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.

துணை வேந்தர்கள் தேர்வுமுடிந்த பின்னர், அதில் விதிமீறல்கள் இருந்தால் அதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரலாம். ஊகத்தின் அடிப்படையில் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி