ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்‍ககம் அறிவித்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2014

ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்‍ககம் அறிவித்துள்ளது.

ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்‍ககம் அறிவித்துள்ளது. 
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ப்ளஸ் டூ தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் மாணவ-மாணவிகளின் மதிப்பெண்
சான்றிதழ்கள் வரும் 21-ம் தேதி காலை 9 மணிக்‍கு அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்‍ககம் அறிவித்துள்ளது. 
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கல்வித்துறையில் மாணவர்களின் சிரமங்களைக்‍ குறைக்‍கும் வகையில் பல்வேறு நடவடிக்‍கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி, மதிப்பெண் சான்றிதழ்கள் பெறும்போது பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவும் செய்வதற்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 21-ம் தேதி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளில் பெற்றுக்‍கொள்ளும்போது, வேலைவாய்ப்பு பதிவையும் அங்கேயே செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் குடும்ப அட்டை மற்றும் 10-ம் வகுப்பு வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றை கொண்டுவரவேண்டும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 
மேலும், மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்கோரி மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு செல்லாமல், பள்ளிகளிலேயே இவற்றை வழங்கவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில் நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த நடவடிக்‍கைக்‍கு மாணவர்களின் பெற்றோர்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி