பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசுத்தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:மாணவர்களுக்கு பெரும்பாலும் அடுத்த வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஆண்டு மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிடுவதற்கு கால அவகாசம் கோரப்பட்டுள்ளதால், வழங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சடிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு அவசரமாக அச்சடிக்கப்பட்டதால், 30 ஆயிரத்துக்கும் அதிகமான சான்றிதழ்கள் அச்சுப்பிழை காரணமாக புதிதாக மாற்றி வழங்கப்பட்டன.மதிப்பெண் சான்றிதழில் பிழைகள் இருந்தால் மாணவர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு பிழைகளில்லாமல் மதிப்பெண் சான்றிதழ்வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி