பிளஸ் 2 மறு மதிப்பீடு கோரி 3,800 மாணவர்கள் விண்ணப்பம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2014

பிளஸ் 2 மறு மதிப்பீடு கோரி 3,800 மாணவர்கள் விண்ணப்பம்.


பிளஸ் 2 மாணவர்கள் 3,800 பேர் பல்வேறு பாடங்களில் மறு மதிப்பீடு கோரி தேர்வுத் துறையிடம் விண்ணப்பித்து உள்ளனர்.

மேலும், 200 பேர் மறுக்கூட்டல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்யும் பணி திருச்சியில் நேற்று துவங்கியது. 600 ஆசிரியர்கள் 3,800 பேரின் விடைத்தாள்களை மீண்டும் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணி 12 அல்லது 13ம் தேதியுடன் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் கொண்ட மாணவர்களின் விவரம் மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கும், அண்ணா பல்கலைக்கும் உடனடியாக தெரிவிக்கப்படும் என, தேர்வுத் துறை வட்டாரம் நேற்று தெரிவித்தது. மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் 14ம் தேதி வெளியாகும் என, தெரிகிறது. பி.இ. ரேங்க் பட்டியல் 16ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரேங்க் பட்டியல் வெளியாவதற்கு முன், மறு மதிப்பீடு முடிவை தெரிவிக்க வேண்டியிருப்பதால், பணிகளை தேர்வுத்துறை வேகப்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி