ஆசிரியர் கல்வித்துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2014

ஆசிரியர் கல்வித்துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு.


ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில், 28 விரிவுரையாளர்கள்,முதுநிலை விரிவுரையாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.நேற்று முன்தினம், ஆன் லைன் வழியில் நடந்த கலந்தாய்வில், 28 பேரும், பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
மேலும் சிலருக்கு, பணியிட மாறுதல் உத்தரவுகளும் வழங்கப்பட்டன. இதற்கான உத்தரவுகளை, இயக்குனர் கண்ணப்பன் வழங்கினார்.

கம்ப்யூட்டர் ஆசிரியர்:

பள்ளி கல்வித் துறையில், 827 கம்ப்யூட்டர் ஆசிரியரை, பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், இதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.கம்ப்யூட்டர் கல்வி மற்றும் பி.எட்., பட்டம் பெற்றவர்களில், பதிவு மூப்பு தகுதி கொண்டவர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம்செய்யப்படுவர். இதற்கான பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் துவங்கும் என, கூறப்படுகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி