தமிழகத்தில், டிப்ளமோ நர்சிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவங்குகிறது.தமிழகத்தில், 23 நர்சிங் கல்லுாரிகளில், இரண்டாண்டு, டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு, பிளஸ் 2வில், அறிவியல் பிரிவு எடுத்து படித்தவர்கள் - 6,799 பேர்; நர்சிங் தொழில் பிரிவு படித்தவர்கள் - 589 பேர்; இதர பிரிவுகளில் படித்தவர்கள் - 713 பேர் என, மொத்தம், 8,101 பேர் போட்டியில் உள்ளனர். இந்த படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் இன்று துவங்குகிறது.
காலையில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரரின் வாரிசுகள் உட்பட, சிறப்பு பிரிவு கலந்தாய்வும், அதன்பின், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நடக்கிறது.கலந்தாய்வு, இம்மாதம், 18ம் தேதி வரை நடக்கும். மேலும் விவரங்களுக்கு, tn.health.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
காலையில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரரின் வாரிசுகள் உட்பட, சிறப்பு பிரிவு கலந்தாய்வும், அதன்பின், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நடக்கிறது.கலந்தாய்வு, இம்மாதம், 18ம் தேதி வரை நடக்கும். மேலும் விவரங்களுக்கு, tn.health.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி