ஆசிரியர் நியமனத் தடைக்கு எதிராக மனு: விசாரிக்க மதுரை நீதிமன்றம் மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2014

ஆசிரியர் நியமனத் தடைக்கு எதிராக மனு: விசாரிக்க மதுரை நீதிமன்றம் மறுப்பு

ஆசிரியர்கள் நியமனத் தடைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு நாளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவு கிடைக்கவில்லை என 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விளக்கமளித்தது.
                                                                             

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு நேற்று தனி நீதிபதி சசிதரன் தடை விதித்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சோமையாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

கூடுதல் செய்தி
 தனி நீதிபதி திரு.சசிதரன் அவர்களின் தீர்ப்பு நகல் அமர்வு நீதிமன்றத்திற்கு  கிடைத்தவுடன் நாளை விசாரணைக்கு வருகிறது.

4 comments:

  1. மணி நண்பரே என்னுடைய TET CERTIFICATE EMPTYA வருது மறுபடியும் DOWNLOAD செய்தால் EXCEED YOUR LIMIT என்று வருது . என்ன செய்தால் என் CERTIFICATE கிடைக்கும் ? ஏன் emptya வருகிறது ?

    ReplyDelete
  2. கவலை வேண்டாம். பலருக்கு அது போன்றுதான் வந்துள்ளது.ஏன் எனக்கும் அப்படிதான். தாள் 1 க்கு சரியாக வந்தது.தாள் 2 க்கு எந்த தகவலுமில்லாமல் வந்தது.

    இரண்டு முறை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியுமாம்.இது TRB விதித்துள்ள விதியாம்.TRB ஏன் இப்படி ஒரு நிர்பந்தந்தத்தை விதித்துள்ளது என்பதை பல முறை யோசித்துப் பார்த்தேன்.ஆனால் எந்த பதிலும் சிந்தைக்கு எட்டவில்லை.

    பலருக்கு இது போன்ற பிழையான சான்றிதழ் வந்துள்ளாதால் மீண்டும் அவர்களாகவே வாய்ப்பினை வழங்குவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது.தேர்வானவர்களின் பதிவு எண்ணும் பிறந்த தேதியும் தெரிவுப் பட்டியலில் உள்ளது.தெரிவுப் பட்டியலும் பகிரங்கமாக அனைவரும் அறியும் வண்ணம் உள்ளது.

      யாராவது கெட்ட நோக்கோடு பிறருக்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முயற்சிக்கலாம்.அப்படி முயற்சி செய்தால் பலர் தங்களின் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியாமல் போகும் சூழல் உருவாகும்.

      TRB கொஞ்சம் யோசித்து இன்னும் புத்திசாலித்தனமான நடைமுறையை கையாண்டிருக்கலாம்.

      Delete
  3. mani sir how to join this comments pls reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி