வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி, சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர் தினமான நாளை, தங்களது சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும், வாக்காளர் அடையாள அட்டையையும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திருப்பியளிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு முறையில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள போதிலும், ஆசிரியர்களின் போராட்டம் 11ஆவது நாளாக நீடிக்கிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி