போடியை அடுத்த காமாட்சிபுரத்தில் கண்டறியப்பட்ட 16, 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கல்.
போடி அருகே காமாட்சிபுரத்தில் 16, 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்றை, போடி ஏ.வி.ச. கல்லூரிப் பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.
தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்றுத் துறை, தொல்பொருள், பாதுகாப்பு விழிப்புணர்வு மையத்தின் மூலம் அந்த மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் நடுகல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கல்லூரி முதல்வர் எம்.ராஜராஜன் வழிகாட்டுதலின்படி, பேராசிரியர்கள் ஏ.ஞானசேகரன், சி.மாணிக்கராஜ், ஆர்.கபேஷ், எம்.கனகராஜ் ஆகியோர் போடியை அடுத்துள்ள காமாட்சிபுரம், ஓடைப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, காமாட்சிபுரம் அருகே தமிழகத்தில் அரிதாகக் கிடைக்கக் கூடிய "சதி' என்றழைக்கப்படும் கல் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து, கல்லூரி முதல்வர் எம்.ராஜராஜன் கூறியது:
தமிழகத்தில் காணப்படும் சதி கற்களிலேயே சற்று வேறுபாடுடையதாக இது காணப்படுகிறது. பொதுவாக, கணவர் இறந்த பிறகு, அவருடைய மனைவி மட்டுமே சிதையில் ஏறி உயிர் துறக்கும் வகையில் நட்டு வழிபடுவது சதி (உடன்கட்டை ஏறுதல்) கல். இந்தச் சதி கல்லில் தாய் தன் குழந்தையையும் கையில் ஏந்திக்கொண்டு தீயில் பாய்ந்தபடி காட்டப்பட்டுள்ளது.
இக் கல்லில் காட்டப்பட்டுள்ள சிகை அலங்காரம், அணிகலன்களின் அலங்கார நிலையைக் கொண்டு, இது கி.பி. 16, 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கல் எனக் கருதப்படுகிறது. மேலும், பிற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், தமது இனம் சார்ந்த காவல் தெய்வம் எனக் கருதி, இச் சதி கல்லின் இரு மருங்கிலும் இரு கற்களை நட்டு, தற்போதும் வணங்கி வருகின்றனர் என்றார் அவர்.
மேலும், இந்த சதி கல் குறித்து பேராசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
போடி அருகே காமாட்சிபுரத்தில் 16, 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்றை, போடி ஏ.வி.ச. கல்லூரிப் பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.
தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்றுத் துறை, தொல்பொருள், பாதுகாப்பு விழிப்புணர்வு மையத்தின் மூலம் அந்த மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் நடுகல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கல்லூரி முதல்வர் எம்.ராஜராஜன் வழிகாட்டுதலின்படி, பேராசிரியர்கள் ஏ.ஞானசேகரன், சி.மாணிக்கராஜ், ஆர்.கபேஷ், எம்.கனகராஜ் ஆகியோர் போடியை அடுத்துள்ள காமாட்சிபுரம், ஓடைப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, காமாட்சிபுரம் அருகே தமிழகத்தில் அரிதாகக் கிடைக்கக் கூடிய "சதி' என்றழைக்கப்படும் கல் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து, கல்லூரி முதல்வர் எம்.ராஜராஜன் கூறியது:
தமிழகத்தில் காணப்படும் சதி கற்களிலேயே சற்று வேறுபாடுடையதாக இது காணப்படுகிறது. பொதுவாக, கணவர் இறந்த பிறகு, அவருடைய மனைவி மட்டுமே சிதையில் ஏறி உயிர் துறக்கும் வகையில் நட்டு வழிபடுவது சதி (உடன்கட்டை ஏறுதல்) கல். இந்தச் சதி கல்லில் தாய் தன் குழந்தையையும் கையில் ஏந்திக்கொண்டு தீயில் பாய்ந்தபடி காட்டப்பட்டுள்ளது.
இக் கல்லில் காட்டப்பட்டுள்ள சிகை அலங்காரம், அணிகலன்களின் அலங்கார நிலையைக் கொண்டு, இது கி.பி. 16, 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கல் எனக் கருதப்படுகிறது. மேலும், பிற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், தமது இனம் சார்ந்த காவல் தெய்வம் எனக் கருதி, இச் சதி கல்லின் இரு மருங்கிலும் இரு கற்களை நட்டு, தற்போதும் வணங்கி வருகின்றனர் என்றார் அவர்.
மேலும், இந்த சதி கல் குறித்து பேராசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி