அரசு மருத்துவக் கல்லூரிகளில், ஆறு மாதங்களாக, பயிற்சி கால ஊதியம் கிடைக்காததால், முதுநிலை மருத்துவ மாணவர்கள் திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.எஸ்., - எம்.டி., படிக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு, மாதந்தோறும், 25 ஆயிரம் ரூபாய் முதல், 27 ஆயிரம் ரூபாய் வரை, பயிற்சி கால ஊதியத்தை, அரசு வழங்கி வருகிறது.சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட, பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில், முதலாம் ஆண்டில் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு, ஆறு மாதங்களாக, பயிற்சி கால ஊதியத்தை தராமல், நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.இதனால், விடுதிக் கட்டணம் செலுத்தவும், தேவையான நூல்கள், உபகரணங்கள் வாங்க முடியாமலும், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, கல்லூரி முதல்வர்களின் கவனக்குறைவே காரணம் என, மாணவர்கள் கூறுகின்றனர்.மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், பயிற்சி கால ஊதியம் கிடைக்காதது பற்றி தகவல் கிடைத்ததும், உடனே தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; ஓரிரு நாளில் கிடைத்து விடும்.மற்ற கல்லூரிகளிலும் பிரச்னை இருப்பதாக தெரியவில்லை. இதுகுறித்து, அறிக்கை தரவும் கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் தடைகள் இருந்தால் அவற்றை அகற்றவும், உடனே பயிற்சிக்கால ஊதியம் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.-
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி