அரசு போக்குவரத்து கழக பணி : 80 ஆயிரம் பேர் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2014

அரசு போக்குவரத்து கழக பணி : 80 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட பணிகளில் சேர, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள, எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் என, 7,500 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளில் சேர விரும்புபவர்கள், போக்குவரத்து கழக அலுவலகங்களில், நவ., 20ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற வேண்டும்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த மண்டல அலுவலகங்களில் டிச., 8ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டது. கடந்த, 12 நாட்களாக, போக்குவரத்து கழக அலுவலகங்களில் விண்ணப்பதாரர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எட்டு போக்குவரத்து கழகங்களுக்கும், நேற்றைய நிலவரப்படி, 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. வரும், 21ம் தேதி தான், மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை தெரிய வரும். அதன் பின், தேர்வு செய்யும் பணி துவங்கும் ' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி