இன்று முதல் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2014

இன்று முதல் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா


கற்றலில் குறைபாடுடையோர் ஆதரவு சங்கம் சார்பில் கற்றலில் குறைபாடுடையோர்வார விழா நவம்பர் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியது:
கற்றலில் குறைபாடுடையோரின் திறமைகளை வெளிக்கொண்டுவரவும், கற்றலில் குறைபாடு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா நடைபெறுகிறது.இந்தநிகழ்ச்சியின் தொடக்கமாக நவம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தியாகராய நகர் வாணி மகாலில் கற்றலில் குறைபாடு குறித்த குழு விவாதம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நவம்பர் 25-ஆம் முதல் 29-ஆம் தேதி வரை தியாகராய நகர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நெருப்பை பயன்படுத்தாமல் சமையல் செய்தல், கதை சொல்லுதல், நடனம், இசை ஆகிய போட்டிகள் நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி