தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், டிசம்பர் 23, 24-ஆம் தேதிகளில் பள்ளி மாணவர்களுக்கான மின்னணுப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள செய்தி:
சென்னை காந்திமண்டபம் சாலையில் உள்ள பெரியார் அறிவியல், தொழில்நுட்ப மையத்தில் பள்ளி மாணவர்களுக்கான மின்னணுப் பயிற்சி வகுப்புகள் வரும் டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.இந்தப் பயிற்சி முகாமில் 7, 8, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கு பெறலாம். இதில் அடிப்படை மின்னணுவியல், மின்னணு பாகங்கள், பல்வேறு துறைகளில் மின்னணு பயன்பாடு உள்ளிட்டவை கற்றுத்தரப்படும். விருப்பமுள்ளவர்கள் 044-24410025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி