ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2014

ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா


தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா கூறினார்.
தொடக்க கல்வித்துறையின்கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகபயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில்நேற்று நடந்தது.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:

பள்ளியின் தரம், கற்பிக்கும் தரம் உயர வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசுப் பள்ளிகளுடன் மற்ற பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பில் தமிழ் கட்டாயமாகிறது.

மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ‘பொனிடிக்ஸ்‘ உடன் கூடிய ஆங்கில உச்சரிப்புக்கான குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர்களை பொருத்தவரை பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

12 comments:

  1. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  2. இன்று சகோதரர் திரு ராமர் வழக்கு விசாரணைக்ககு வருகிறது ஆனால் முடிவு கிடைக்காது

    இன்று சகோதரர் ராமர் மற்றும் சகோதரர் சுடலை மணி இரு வழக்கும் ஒன்றாக இணைத்து இன்னொரு நாள் விசாரணையை ஒத்தி வைப்பார்கள் அன்று அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி நமது வழக்கை வெற்றிகரமாக முடித்து வைப்பார்

    நன்றி

    எதிர்பார்த்து ஏமாற வேண்டாம் எல்லாம் நல்ல படியாக முடியும்

    ReplyDelete
  3. WP(MD).16547/2014 M/S.V.SASIKUMAR MR.J.GUNASEELAN MUTHIAH
    (Service) A. MOHAN G.A. TAKES NOTICE
    FOR THE RESPONDENTS
    To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 - DO -
    To vacate stay
    MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER

    To Implead
    MP(MD).5/2014 M/S.T.LAJAPATHI ROY

    ReplyDelete
  4. 187. WP(MD).16547/2014

    M/S.V.SASIKUMAR

    MR.J.GUNASEELAN MUTHIAH
    (Service)

    A. MOHAN


    G.A. TAKES NOTICE

    FOR THE RESPONDENTS

    To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 - DO -
    To vacate stay
    MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER

    To Implead
    MP(MD).5/2014 M/S.T.LAJAPATHI ROY

    ReplyDelete
    Replies
    1. Akilan sir some including me aid school apoint tea er ready to file a case how to file a case how much amount how to contact layer plz guide me sir

      Delete
    2. dear baskar brother please contact with mail id

      my mail id akilannatarajan6@gmail.com

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நண்பர்களே,,,,,,,சற்று சிந்தியுங்கள்,,,,,,,,, இன்றும் எங்கள் கல்வி மறுக்கப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மையே,,,,,,
    காரணம்,,,,,,, 669 இடைநிலை ஆசிரியர் கலிப்பணியிடம் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் என்றால்,,,,,,,,,,, அதற்குரிய மாணவர்களின் கல்வி நிலை என்ன,,,,,,,,,,,,,
    அவர்களின் கல்வித்தரம் எப்படி உயரும்,,,,,,,,,,,,,
    அவர்கள் எவ்வாறு அனைத்து சமுதாயத்தினருடனும் சமநிலையில் போட்டி போட முடியும் ,,,,,,,,,,,,,,,,,, நன்றாக சிந்தியுங்கள் இங்கு அடிப்படைகல்வியே வளர்க்கப்படும் சூழல் சரியாக அமைக்கப்படவில்லை என்பது உண்மை தானே,,,,,,,,,,,,,,,, அப்படியென்றால், இங்கு எங்கள் சமுதாயத்திற்கு இன்று வரை கல்வி மறுகப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மை தானே,,,,,,,,,,

    ReplyDelete
  7. Thurai amaicharukey theriyala namma nilamai ipdi ayuduchey.

    ReplyDelete
  8. வரவேற்கத்தக்கது.பள்ளி நேரத்தில் முழுமையாகக் கற்றுக்கொடுத்தாலே போதும்.மாணவர்களின் கற்றல்திறன் மேம்படும்.
    .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி