பெல்டால் விளாசிய அக்காள்–தங்கை அரெஸ்ட்? ஹரியானாவில் அதிரடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2014

பெல்டால் விளாசிய அக்காள்–தங்கை அரெஸ்ட்? ஹரியானாவில் அதிரடி!



ஹரியாணா மாநிலம், ரோட்டக் பேருந்து ஒன்றில் ஈவ் டீசிங் தொல்லை கொடுத்ததாக 3 பேரை விளாசிய சகோதரிகள் விவகாரத்தில் அடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த சம்பவத்தன்று அருகில் இருந்த வேறு 6 பெண்கள் போலீஸில் வாக்குமூலம் அளித்தனர். இதில் அந்த 3 இளைஞர்கள் மீது எந்தவித தவறும் இல்லை என்று கூறியுள்ளனர்.மேலும் விசாரித போது ஈவ் டீசிங் பற்றிய விவகாரம் இது இல்லை என்றும், நோய்வாய்ப்பட்ட பெண்மணி ஒருவருக்கு இருக்கை ஒதுக்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சை என்றும் தெள்ளத் தெளிவாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

வீர சகோதரிகளுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த 6 பெண்களில் ஒருவர், “குல்தீப் (குற்றம்சாட்டப்பட்ட இளைஞரில் ஒருவர் பெயர்), என்பவரிடம் தான் ஒரு டிக்கெட் எடுத்துத் தருமாறு கோரினேன். அப்போது ரோட்டக் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்று கொண்டிருந்தது. உடல்நலம் குன்றிய பெண்மணிக்காக டிக்கெட் எடுத்துத் தர கோரினேன். இந்த சகோதரிகள் ஏற்கெனவே 8-ஆம் எண் இருக்கையில் அமர்ந்திருந்தனர், இது அந்த நோய்வாய்ப்பட்ட பெண்மணிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை. இளைஞர்கள் டிக்கெட்டை அந்தச் சகோதரிகளிடம் காண்பித்து இருக்கையை விட்டுவிடுமாறு கோரினர். பிறகு அந்த நோய்வாய்ப்பட்ட பெண்ணை வேறு இருக்கையில் அமருமாறு இளைஞர்கள் கூறினர். ஆனால் சகோதரிகள் வசைமாரியில் இறங்கினர்என்று கூறியுள்ளார்.
முன்னதாக் செவ்வாயன்று மற்றொரு பயணியும் இளைஞர்கள் மீது தவறில்லை என்று சாட்சியம் அளித்தனர்.மேலும் மோஹித், குல்தீப், தீபக் அகிய இளைஞர்களுக்கு ஆதரவாக அவர்களது கிராமமே கிளம்பியுள்ளது. கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய சாட்சியங்களின் படி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஷஷாங்க் ஆனந்த் என்பவர் கூறினார்.இந்தத் திருப்பங்களுக்குப் பிறகு சகோதரிகளை கவுவரிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் கைது செய்யப்படக் கூடும் என்றும் தெரிகிறது!.


1 comment:

  1. ஒரு பெண் நினைத்தால் "எதையும் செய்யலாம் " என்பதன் அர்த்தம் இது தானோ???

    ஐயகோ பயந்து வருதே .........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி