சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் கட்டாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் கட்டாயம்

சி.பி.எஸ்.இ., பள்ளி வகுப்புகளில், தமிழுக்கு முக்கியத்துவம் தர, தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. எனவே, 'வரும் கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ., முதல் வகுப்பில் இருந்து, தமிழ் பாடத்தை, முதல் பிரிவாக கற்றுக் கொடுக்க வேண்டும்' என, தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவை வலியுறுத்தி, கல்வி அதிகாரிகள், மாவட்டந்தோறும் சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகிகளுடன், ஆலோசனை நடத்தி வருகின்றனர்.வரும் கல்வியாண்டில், முதல் வகுப்பில், பகுதி ஒன்றில், தமிழ் என்ற அடிப்படையில் பாடங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த கல்வியாண்டில், இரண்டாம் வகுப்பிலும், தொடர்ந்து, 2025க்குள் பத்தாம் வகுப்பு வரை, தமிழ் பாடத்தை, முழுமையாக கற்றுக் கொடுக்க, தமிழக கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.-

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி