உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 'குத்துச்சண்டை பயிற்சி' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2014

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 'குத்துச்சண்டை பயிற்சி'

விருதுநகர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சர்வதேச குத்துச்சண்டை வீரர் பி.ரவிச்சந்திரன் செய்முறை பயிற்சி அளித்தார். குத்து சண்டை, ஸ்குவாஷ், வாள் சண்டை, செஸ், டேக்வாண்டோ, ஜூடோ, கேரம், நீச்சல், பீச் வாலிபால் உட்பட பல விளையாட்டுக்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
இதற்கான பயிற்சியை தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களை கொண்டு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில், குத்து சண்டையின் போது கவனிக்க வேண்டியவை, அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற வழி முறை குறித்தும், அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சர்வதேச குத்து சண்டை வீரர் பி. ரவிச்சந்திரன் செய்முறை பயிற்சி வழங்கினார். மூன்று நாள் பயிற்சிக்குப்பின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்று கொடுப்பர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி