Dec 1, 2014
பாட்டிலில்
அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின்
சராசரி விலை ரூ.20. தமிழகத்தில்
சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை
குடிநீரின் விலை ரூ.10. இது
நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு
மறை நீர் (Virtual water) விலை தெரியும்?
மறை நீர் என்பது ஒருவகை
பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை
(Gross domestic product) ஒரு
நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு
நாட்டின் நீர் வளத்தை கொண்டு
மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது.
இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர்
ஜான் ஆண்டனி ஆலன். இந்த
கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.
ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே
மறை நீர். இது ஒரு
தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன்
கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம்
என்கிறது மறைநீர் தத்துவம். மறை
நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம்,
“கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால்,
அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட
நீர் அதில் இல்லை. ஆனால்,
அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே
செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே
மறை நீர். கோதுமை தேவை
அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு
மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி
செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக்
மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச்
சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.
புத்திசாலி
நாடுகள்!
நீரின்
தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி,
ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா,
இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய
நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி
இறைச்சி. ஒரு கிலோ பன்றி
இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை
5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி
உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக
இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான
மறை நீர் தேவை 560 லிட்டர்.
சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும்
இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும்
ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும்
ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத்
துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி
கொள்கைகளை வகுத்துள்ளன.
இது இந்திய நிலவரம்!
முட்டை
உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு
நாளைக்கு மூன்று கோடி முட்டைகள்
உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி
வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு
ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு
4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மூன்று
ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்
வளைகுடா
மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை
கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப்
பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க
வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம்
கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி
செய்ய 196 லிட்டர் மறை நீர்
தேவை. மூன்று ரூபாய் முட்டை
196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த
ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும்
ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர்
மறை நீர் தேவை. ஒரு
கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான
மறை நீர் தேவை 4325 லிட்டர்.
சென்னை
கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான
கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில்
அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான்
இல்லையா? உண்டு. இங்கு மனித
சக்திக்கு குறைந்த செலவு என்றால்,
நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன்
எடை கொண்ட ஒரு கார்
உற்பத்திக்கான மறை நீர் தேவை
நான்கு லட்சம் லிட்டர்கள்.
இந்தியாவில்
இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர்
மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல்
பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல்
பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
அன்னிய
செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார்
10,000 கோடி ரூபாய். ஒரு எருமை
அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை
18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில்
இருந்து ஆறு கிலோ தோல்
கிடைக்கும்.
ஒரு கிலோ தோலை பதனிட்டு
அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர்
தேவை.
பனியன்,
ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா?
250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை
நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட்
தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர்
தேவை.
தண்ணீருக்கு
எங்கு கணக்கு?
ஒரு பொருளின் விலை என்பது அதன்
எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும்
நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும்
ஏன் அதன் விலையை செலவுக்
கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம்
இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை
விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.
இப்படி
எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும்
கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா
இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல்
இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய்
ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது
மறை நீர் பொருளாதாரம்.
மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின்
பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான்
இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை
நீர் தத்துவத்தை உணர வேண்டும்.
Recommanded News
Related Post:
14 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Amazing..
ReplyDeleteNice information Mr Surulivel
ReplyDeleteThank you
thank u alex sir
DeleteCan u please tell me in which poothagam does the maraineer padal is there please reply
DeleteIthu pothuvana thathuvan than N anpaa... entha oru uyirinamum thevaikku Mel thanneerai vechupathillai... naam Marai neer thathuvathai pesamal Malawi neerai semikka pothuvana valiya edukka sollungal
ReplyDeleteThank you my dear Surulivel
ReplyDeleteKeep it up
thank u vijay sir
Deleteஇது போன்ற தத்துவங்களை அரசு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்
ReplyDeleteமிகவும் அருமை தகவல். ..
ReplyDeletereally important andd need thinking about
ReplyDeleteSuperma......!
ReplyDeletevery nice sir intha karuthai nam nattai aalupavarkal purinthukondal thinam thinam oru yelai vivasayi sakamattan
ReplyDeleteThanks for the information
ReplyDeleteசரி! சகோ. தண்ணீரை சேமிக்க தான் அரசு எந்த வித முயற்சியும் இது வரை செய்யவில்லையே. இப்படியே போனால் தண்ணீரை அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை அல்லவா வந்து விடும்.
ReplyDeleteஇப்பவே kinley,accuvafina, bislery, cock என்று உள்ளேயே வியாபாரம் நடக்கிறேதே இதற்கான மாற்று வழி தான் என்ன?