அரையாண்டுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடி தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2015

அரையாண்டுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடி தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில் அரையாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு உடனடித் தேர்வு வருகிற 5-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் தொடங்கி நடைபெற இருப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

கடந்த மாதம் 10-ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு நடைபெற்றது. இதில், அனைவரும் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இதற்கான விடைத்தாள் திருத்தம் செய்து மாணவ, மாணவிகளிடம் அளிக்கப்பட்டது. அதில், குறிப்பிட்ட அளவு மாணவ, மாணவிகள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக வருகிற 5-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் தேர்வு நடைபெற இருப்பதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி