பாலிடெக்னிக் தேர்வு: பழைய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2015

பாலிடெக்னிக் தேர்வு: பழைய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு


பாலிடெக்னிக் வாரியத் தேர்வில் பழைய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆணைப்படி, வருகிற ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ள பாலிடெக்னிக் வாரியத் தேர்வுகளில் பழைய மாணவர்கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.2008-ஆம் ஆண்டுக்கு முன் 3 ஆண்டு பாலிடெக்னிக் படிப்பை மேற்கொண்டவர்களும், 2007-ஆம் ஆண்டுக்கு முன் 4 ஆண்டு பகுதி நேர பாலிடெக்னிக் படித்தவர்களும் மட்டுமே இந்த கருணை அடிப்படையிலான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பாடம் ஒன்றுக்கு ரூ. 500 தேர்வுக் கட்டணமாகவும், மதிப்பெண் பட்டியலுக்கு ரூ. 30, பதிவுக் கட்டணமாக ரூ. 25 அவரவர்கள் படித்த கல்லூரி முதல்வர் மூலமாக செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 17 கடைசித் தேதியாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி