PG-TRB: முறைகேட்டை தடுக்க டி.ஆர்.பி., முடிவு: தேர்வர் முன் விடைத்தாள் கட்டுக்கு 'சீல்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2015

PG-TRB: முறைகேட்டை தடுக்க டி.ஆர்.பி., முடிவு: தேர்வர் முன் விடைத்தாள் கட்டுக்கு 'சீல்'


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், முறைகேட்டை தடுக்க, விடைத்தாள்கட்டுகள் அடங்கிய உறையில், தேர்வர் முன், 'சீல்' வைக்கவும், இரு தேர்வர்களின் கையெழுத்தை பெறவும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்பாடு செய்துள்ளது.
டி.ஆர்.பி., அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,807 முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், 10ம் தேதி, மாநிலம் முழுவதும், போட்டித் தேர்வை நடத்துகிறது. சில லட்சம் பேர், இந்த தேர்வை எழுத உள்ளனர். தேர்வு நடைமுறைகளில், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவ்வப்போது சில மாற்றங்களை, டி.ஆர்.பி., செய்து வருகிறது.

அதன்படி இந்த தேர்வில், தேர்வு அறையில், மொத்தமாக சேகரிக்கப்படும் விடைத்தாள்களை, ஒரு உறையில் போட்டு, தேர்வர் முன்னிலையில் அதை, 'சீல்' வைக்கவும், இது தொடர்பாக,இரு தேர்வர்களிடம் கையெழுத்து பெறும் நடைமுறையையும் அமல்படுத்துகிறது.

இது குறித்து, மாவட்டங்களில் உள்ள கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:கடந்த தேர்வுகளில், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் (ஆப்டிக்கல் மார்க் ரீடர்), தேர்வர், தன்னுடைய பதிவு எண்ணை, 'ஷேட்' செய்யும் முறை இருந்தது. தற்போது, விடைத்தாளில், தேர்வர் பெயர், புகைப்படம், பதிவு எண், பாடம் உட்பட,அனைத்து தகவல்களும், ஏற்கனவே அச்சிடப்பட்டு இருக்கும். தேர்வர்கள், கையெழுத்து மட்டும் போட வேண்டும்; அவ்வளவு தான். கடந்த காலங்களில், ஒரு தேர்வு அறையில் இருந்து பெறப்படும் விடைத்தாள்களை, அந்த அறை கண்காணிப்பாளர், தேர்வு மையத்திற்கு எடுத்துச் சென்று, அதன்பின், 'சீல்' வைப்பார். தற்போது, தேர்வு அறையில், தேர்வர் முன், விடைத்தாள்கள் அடங்கிய உறையை, 'சீல்' வைத்து, அதற்கு சாட்சியாக, இரு தேர்வர்களிடம், கையெழுத்து வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நடைமுறை மூலம், பாதுகாப்பை மேலும் உறுதிபடுத்த முடியும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலி பணியிடங்கள் விபரம்

1 தமிழ் 277

2 ஆங்கிலம் 209

3 கணிதம் 222

4 இயற்பியல் 189

5 வேதியியல் 189

6 தாவரவியல் 95

7 விலங்கியல் 89

8 வரலாறு 198

9 பொருளியல் 177

10 வணிகவியல் 135

11 உடற்கல்விஇயக்குனர், நிலை 127


மொத்தம் 1,807

18 comments:

  1. Good mrg to all akilan adw case pathi ful detail kodugaran sonnigale pls solluga

    ReplyDelete
  2. Pg welfare list epa anybody tell

    ReplyDelete
  3. ஏற்கனவே நடந்த டியிடி- ல் நடந்த முறைகேட்டை யார் மறப்பது பல பேரின் வாழ்க்கையை வயிற்றில் அடித்த இந்த டிஆர்பி நீ வாழ்க.... மேலும் பல முறைகேட்டை நடத்த்தான் இந்த நாடக அறங்கேற்றம்.

    ReplyDelete
    Replies
    1. தேன் எடுப்பவன் புறம் கையை நக்காமல் இருப்பான

      Delete
    2. மிக சரியாக சொன்னீர்கள் சார்

      Delete
    3. kandippa bathil solli than akavendu orunal. (documentary evidence pakka)

      Eppavum thappu nadatha peru purathchi erpadlam.

      This method avoid mistake

      With in a week result is better. Next week appointment.

      ellathukkum veliya paiera meya kudathu. ( athanga namma TRB )

      Delete
  4. Iyya akilan adw case enna achu posting poduvangala illa apdiye kidapil poturuvankala pls tel me

    ReplyDelete
  5. அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  6. இனிய காலை வணக்கம் அன்பர்களே..!

    ReplyDelete
  7. Gud morning frnds. Wat abt adw list.

    ReplyDelete
  8. நண்பர்களே வணக்கம்

    "எல்லமே இனிமே நல்ல தான் நடக்கும் "

    ஆதிதிராவிட , பிரமிள கள்ளர் பள்ளிகளில் ஜனவரிக்குள் (2015 ) கட்டாயம் பணி நியமனம் நடைபெறும்

    2014 டிசம்பர் 22 வரை ADW ,PIAMALAI KALLAR , நியமனம் தொடர்பான வழக்கை நீதியரசர் ஐயா டி. ராஜா அவர்கள் Court NO 12 ல் விசாரித்து வந்தார்கள் தற்போது அவர்கள் பணி உயர்வு பெற்று சென்று விட்டார்கள்

    இனிமேல் 05.01.15 முதல் ADW , PIRAMILLAI KALLAR பள்ளிகளில் நியமனம் தொடர்பான வழக்கை மாண்புமிகு நீதியரசர் K. ரவி சந்திர பாபு அவர்கள் COURT எண் 10 விசாரிப்பார்

    சகோதரர் ராமர் வழக்கு எண் 16547 ,
    சகோதரர் சுடலை மணி வழக்கு எண் 17255 இவ்விரு வழக்கும் ஒன்றிணைத்து நீதிபதிக்கு
    போதிய விளக்கம் அரசு கொடுத்து விட்டது


    இனி தமிழக அரசின் அரசு தலைமை வழக்கறிஞர் ஐயா திரு சோமையாஜி அவர்கள் சென்னையில் இருந்து மதுரை வந்தால் அன்று வழக்கு கண்டிப்பாக தள்ளுபடி ஆகிவிடும் இதுதான் உண்மையான நிலைமை

    அவர்கள் இந்த வாரத்திற்குள் வந்து விடுவார்கள் என்று நம்புகிறோம்

    அப்படி வராத நிலையில் அவரை வரவழைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்

    பொங்களுக்குள் வழக்கை தள்ளுபடி பண்ண வேண்டும் என்பதே எங்களது எண்ணம் அதற்கான முயற்சிகளில் தான் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன் எனவே தன்னம்பிக்கையுடன் இருக்கவும்

    நன்றி

    உங்களின் தன்னம்பிக்கையை குறைக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றரை் அவர்களுக்கு
    உங்கள் புன்னகையை பரிசளிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. இதற்கு மேலும் எதேனும் விளக்கம் தேவைப்படுகிறதா வேண்டும் எனில் கேளுங்கள் பதலளிக்கிறேன்

      நன்றி

      Delete
    2. நம்மிடம் உள்ள தன்னம்பிக்கை மட்டுமே நமது வாழ்கையை உயர்த்தும் .என்றும் தன்னம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் adw list ஐ எதிர்பார்த்து .நன்றி நண்பரே

      Delete
  9. Thakavaluku nanri akilan avarkale. Naatkal kadanthu selkirathu aanal intha arasu kaapatuma kaividuma kelvikuriyil nam vaalkkai ?

    ReplyDelete
  10. Nampikkaiyodu than vaalnthu kodirukirom irunthalum ungalai ponravarkin vaarthai enkagluku iyarkai uram ootuvathai amainthu thelivodu irukirom akilan avarkale. Thangal mobil ennai kuripidavum sakothararey .

    ReplyDelete
  11. நம்பிக்கையோடுதான் இருக்கின்றோம். ஆனால் என்ன, அதற்குள்ளாகவே அறுபது வயதை எட்டிவிடுவோம். நான் நினைக்கிறன் Bed படிச்சது தப்பாபோச்சு. ஆடு மாடு மேய்ச்சிகிட்டு இருந்திருக்கலாம். பின்ன என்ன சார், நாம கஷ்டபட்டு படிச்சி Exam ல Pass பன்னினா இவங்க என்னன்னம்மோ சிஸ்டம் கொண்டுவருவாங்க. இது வேற, நான் ரொம்ப ஸ்டிரிக்ட் னு காமெடி பன்றாங்க. யேன் அந்த ரெண்டு பேரு முன்னாடியா அந்த கட்ட பிரிக்கபோறாங்க. அது இல்லையே. வழக்கம்போல முறைகேடு பன்னுவதற்கு ஒரு ஏஜண்ட் இருப்பான். எல்லாம் அவபார்த்துக்குவான் சார்.

    ReplyDelete
  12. Thank u sir neengal sonnadhu pongalindre kondadiyadhupol ulladhu

    ReplyDelete
  13. Akilan g pls give pg secodlist details

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி