குரூப்-1 மெயின் தேர்வுக்கு 105 பேர் தகுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2015

குரூப்-1 மெயின் தேர்வுக்கு 105 பேர் தகுதி


பழனி அருகே ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் பயின்ற 105 பேர் குரூப்-1 மெயின் தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2014ஆம் ஆண்டு டிஎஸ்பி, ஆர்டிஓ, டிஇஓ மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவிகளுக்கு காலியாக உள்ள 79 பணியிடங்களுக்கான அறிவிப்பையும், அதைத் தொடர்ந்து கடந்த 20.7.2014 அன்று முதல் நிலைத் தேர்வும் நடத்தியது.

இதில், சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் முதல் நிலைத் தேர்வுக்கான முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது.மெயின் தேர்வுக்கு 1:50 என்ற விகிதத்தில் 4 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து பயின்ற 105 பேர் தேர்வாகியுள்ளனர். அதில், 47 பேர் மாணவர்கள், 58 பேர் மாணவியர்.இவர்களில் 41 பேர் தற்போது கிராம நிர்வாக அலுவலர்களாகப் பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான பயிற்சி, ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் விரைவில் துவங்கவுள்ளதாக, மையத்தின் இயக்குநர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி