தர்மபுரி மாவட்டம் முழுவதும் 56 மையங்களில் 20 ஆயிரத்து 618 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ்-2 தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 5-ந்தேதி முதல் தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 378 மாணவர்கள், 9 ஆயிரத்து 240 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்.மாவட்டத்தில் உள்ள 93 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 உதவி பெறும் மேல் நிலைப்பள்ளிகள், 5 சுயநிதி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 37 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 139 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள். இந்த தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 56தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அறை கண்காணிப்பாளர்கள்
இந்த தேர்வையொட்டி 56 மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள், 56 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேர்வு அறைக்கும் அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் வினாத்தாள், விடைத்தாள் காப்பாளர்கள் என மொத்தம் 1500 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான குடிநீர், மின்சார வசதி, மேஜை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டு உள்ளார். இதைதொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் இதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கும் பணியில் கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி