குறைந்த விலையிலான ஆகாஷ் டேப்லட்டை உருவாக்கிய டேட்ட விண்ட் நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட் போனின் விலை
ரூ.3,000 என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அதைவிட முக்கியமான விஷயம் ஒரு வருடத்துக்கு இலவச இணைய இணைப்பு வசதியுடன் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதற்காக செல்போன் சேவை நிறுவனங்களுடன் பேசி வருவதாக நிறுவன சி.இ.ஒ சுனிதா சிங் துலி கூறியுள்ளார்.எங்குப் பார்த்தாலும் ஸ்மார்ட் போன்கள் இருப்பது போல் தோன்றினாலும் இந்தியாவில்செல்போன் வாங்க வருபர்களில் 76 சதவீதம் பேர் ரூ.4,000 விலையிலான போன்களையே வாங்குவதாகவும் ,60 சதவீதம் பேர் ரூ.2,000 விலையிலான போன்களை வாங்குவதாகவும் செல்போன் பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களில்பெரும்பாலானோர் இணைய வசதியைப் பயன்படுத்துவதில்லை.
இதை மாற்றும் வகையில்தான் ஓராண்டு இலவச இணைய வசதியுடன் ஸ்மார்ட் போனைக் கொண்டு வர இருப்பதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த ஸ்மார்ட் போனை எங்கு வாங்கலாம்? யார் வேண்டுமானாலும் வாங்கலாமா?
ReplyDeletegood matter
ReplyDelete