வங்கிச் சேவையில் அஞ்சல் துறை : ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2015

வங்கிச் சேவையில் அஞ்சல் துறை : ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பம்


வங்கிகள் தொடங்க விரும்பும் நிறுவனங்கள் பட்டியலில் இந்திய அஞ்சல் துறையும் தேசியப் பங்குச் சந்தையும் இணைந்துள்ளன. சிறிய வங்கிகள் மற்றும் பேமென்ட் பேங்க் எனப்படும் பணம் அளிப்பு வங்கிகளை தொடங்க விண்ணப்பித்துள்ள 113 நிறுவனங்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய அஞ்சல் துறை தவிர தேசிய பங்குச் சந்தையும் இடம் பெற்றுள்ளது. இது தவிர வீடியோகான், டெக் மகிந்திரா உள்ளிட்டவையும் வங்கி தொடங்க விண்ணப்பித்துள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து பணம் அளிப்பு வங்கி தொடங்க விண்ணப்பித்துள்ளது. வங்கிச் சேவை பரவலாக சென்று சேரும் வகையில் சிறிய வங்கிகள் மற்றும் பணம் அளிப்பு வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கி கடந்தாண்டு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இவ்விரு வகை வங்கிகள் தொடங்க 113 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதில் 72 நிறுவனங்கள் சிறு வங்கிகள் தொடங்கவும் 41 நிறுவனங்கள் பணம் அளிப்பு வங்கி தொடங்கவும் விண்ணப்பித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி