10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்: 10.72 லட்சம் பேர் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2015

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்: 10.72 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,298 மையங்களில் இன்று 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், 11,827 பள்ளிகளைச் சேர்ந்த, 5,40,505 மாணவர்; 5,32,186 மாணவியர் என, மொத்தம், 10,72,691 பேர் தேர்வு எழுதுகின்றனர்; 50,429 தனித்தேர்வர்களும் பதிவு செய்துள்ளனர்.
பறக்கும் படை:

தமிழ் வழியில் படித்த, 7,30,590 பேர் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட, 33,816 பேர் கூடுதலாக, இத்தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க, 5,200 பேர் கொண்ட, 2,300 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கட்டுப்பாடுகள்


* முகப்பு சீட்டில், உரிய இடத்தில் கையெழுத்து போட வேண்டும்.


* ஒரு பக்கத்தில், 20 - 25 வரிகள் வரை, இருபுறமும் எழுத வேண்டும்.


* விடைக்கு அருகில், வினா எண்ணை தவறாமல் எழுத வேண்டும்.


* வினாத்தாள் வரிசையை (ஏ அல்லது பி) மதிப்பெண்களுக்கான பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.


* நீலம் அல்லது கறுப்பு மை பேனாக்களால் மட்டுமே, தெளிவாக எழுத வேண்டும்.


* விடைத்தாளில் எழுதாத பக்கங்களில், குறுக்கு கோடிட வேண்டும்.


* வினாத்தாளில் குறியீடு இடக்கூடாது.


* விடைத்தாளில் தேர்வு எண், பெயர் அல்லது வேறு குறியீடு எழுதக் கூடாது.


* வண்ண பேனா, பென்சில், 'ஸ்கெட்ச்' பயன்படுத்தக் கூடாது.


* விடைத்தாளில் உள்ள (மார்ஜின்) கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக் கூடாது.


* விடைத்தாள் புத்தக தாளை கிழிக்கவோ, நீக்கவோ கூடாது.



விடைத்தாள்கள் எப்படி?



* தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளுக்கு, 22 பக்க கோடிட்ட விடைத்தாள் வழங்கப்படும்.


* ஆங்கிலம் இரண்டாம் தாளில், முதல், இரண்டு பக்கங்கள் விளம்பரம் தொடர்பான கேள்விக்காக, கோடிடப்படாமல் இருக்கும்; மற்ற மொழிகளுக்கு, கோடில்லாத விடைத்தாளை பயன்படுத்தக் கூடாது.


* கணிதம், அறிவியல் பாடங்களுக்கு, 30 பக்கங்களில் கோடிடப்படாத விடைத்தாள் வழங்கப்படும்.


* கணிதத்துக்கு, 28 மற்றும் 29 பக்க விடைத்தாளில், 'க்ராப் ஷீட்' இணைக்கப்பட்டிருக்கும்.


* சமூக அறிவியலுக்கு, 30 பக்கங்களில், முதலில் நான்கு வரைபடங்கள் இருக்கும், மீதமுள்ள, 26 பக்கங்களில் தேர்வு எழுதலாம்.


* கூடுதல் விடைத்தாள்கள் தேவைப்பட்டால் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி