கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 வினாத்தாள்: 4 ஆசிரியர்கள் சிறையில் அடைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2015

கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 வினாத்தாள்: 4 ஆசிரியர்கள் சிறையில் அடைப்பு


பிளஸ் 2 வினாத்தாளை கட்செவி அஞ்சல் மூலம் (வாட்ஸ்-அப்) அனுப்பிய விவகாரத்தில் கைதான தனியார் பள்ளி 4 ஆசிரியர்களும் ஒசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிளஸ் 2 கணிதத் தேர்வு கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. ஒசூரில் தனியார் பள்ளி ஒன்றில் தேர்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் மகேந்திரன் அந்த வினாத்தாளை செல்லிடப்பேசியில் படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சல் மூலமாக மற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்தார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன், அவருடன் பணிபுரிந்துவந்த கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் சேலம் மத்தியச் சிறையில்அடைக்கப்பட்டனர்.இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு மேலும் 4 ஆசிரியர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். ஒசூர் பாகலூர் அட்கோ தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த வெங்கட்டகவுண்டனூரைச் சேர்ந்த சஞ்ஜீவ் (25), வாணியம்பாடியைச் சேர்ந்த விமல்ராஜ் (27), ஒசூர் மூக்கண்டப்பள்ளியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (26), வெங்கடேஷ் நகரைச் சேர்ந்தகவிதா (30) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இரவு முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது.கைதான ஆசிரியர்கள் சஞ்ஜீவ், விமல்ராஜ், மைக்கேல்ராஜ், கவிதா ஆகிய 4 பேரும் சனிக்கிழமை பிற்பகல் ஒசூர் இரண்டாவது நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஏப்ரல் 9-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் சஞ்ஜீவ், விமல்ராஜ், மைக்கேல்ராஜ் ஆகிய 3 பேரும் சேலம் மத்தியச் சிறையிலும், ஆசிரியை கவிதா கிருஷ்ணகிரி பெண்களுக்கான கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி