ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு ரூ.30 கோடியில் நிர்வாக கட்டடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2015

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு ரூ.30 கோடியில் நிர்வாக கட்டடம்


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு, 30.40 கோடி ரூபாய் செலவில், கட்டடம் கட்டும் பணியை, பொதுப்பணித்துறை துவக்கியுள்ளது.இந்த பல்கலைக்கழகம், 2008ல், தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டது.
இதில், 600க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் இணைக்கப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பாக்கத்தில், பல்கலைக்கழக கட்டடம் கட்ட, அரசு முடிவு செய்தது. தற்போது அப்பணியை, பொதுப்பணித்துறையினர் துவக்கியுள்ளனர்இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இங்கு, பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடம், வகுப்பறைகள், மாணவர், மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டப்படும். பொதுவான உணவருந்தும் கூடமும் அமைய உள்ளது. நவீன வசதிகளுடன், இந்த கட்டடம் அமையும். கட்டட பணிக்காக, அரசு, 30.40 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. கட்டுமானப்பணி விரைவில் துவங்கும். ஒப்பந்ததாரர் தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டு விட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி