சத்துணவு சமையல் செய்ய மாட்டோம்: கலை ஆசிரியர்கள் போர்க்கொடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2015

சத்துணவு சமையல் செய்ய மாட்டோம்: கலை ஆசிரியர்கள் போர்க்கொடி.


கல்விப் பணிகளைத் தான் செய்வோம்; சத்துணவு சமையல் மற்றும் உணவுபரிமாறும் பணிகளை செய்ய மாட்டோம்' என, கலை ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
சத்துணவு ஊழியர்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். பல பள்ளிகளில் சமையற்கூட பூட்டை உடைத்து, ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி, சத்துணவு சமைக்கும் பணியில் ஈடுபடுத்துகின்றனர். இதைக் கண்டிக்கிறோம். ஏற்கனவே, அரசின் நலத்திட்ட பணிகளுக்காகவும், இலவச பொருட்கள் வழங்குவதற்காகவும், கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். தற்போது சத்துணவுப் பணியும் கூடுதல் சுமையாக உள்ளது. எனவே, மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தரும் பணிக்கு மட்டும்,ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி