வங்கி ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு: மும்பையில் ஒப்பந்தம் கையெழுத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2015

வங்கி ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு: மும்பையில் ஒப்பந்தம் கையெழுத்து


நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் ஊதிய உயர்வு கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களுடன் அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திவந்தது.இதில் உடன்பாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து வங்கி ஊழியர் ஒப்பந்தம் மும்பையில் இன்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்ததில் இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்ததின் படி 1.11.2012 முதல் கணக்கிட்டு 15 சதவிகித ஊதியம் உயர்த்தி வழங்க முடிவு செய்யயப்பட்டுள்ளது.ஊதிய உயர்வால் 43 வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்கள் பயன்பெறுவர். இந்த ஊதிய உயர்வால் வங்கிகளுக்கு 4,725 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி