தமிழகத்தில், தற்போது, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில், 'அட்லஸ்' புத்தகம், ஆறுமுதல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு,தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதால், 'அட்லஸ்' புத்தகத்தை மாற்ற வேண்டி இருந்தது. திருத்தப்பட்ட புத்தக தயாரிப்பு தாமதமானதால், கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை. வரும் கல்வியாண்டில், பள்ளிகள் திறந்தவுடன், எட்டாம் வகுப்பு வரை மட்டுமின்றி, ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கும் இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி