ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது: சந்தீப் சக்சேனா தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2015

ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது: சந்தீப் சக்சேனா தகவல்


வாக்காளர் பட்டியலில் கூடுதல் விவரங்களை இணைக்க ஆதார் எண் அவசியம் இல்லை என்றும், ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், ஆதார் விவரங்களை இணைக்கவும் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்காக தமிழகத்தில் 98 சதவிகித மக்களிடம் தகவல் பெறப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் இந்த பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மற்ற மாவட்டங்களில் முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், வாக்காளர் பட்டியலில் கூடுதல் விவரங்களை இணைக்க ஆதார் எண் அவசியம் இல்லை என்றும், ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது என்று கூறினார்.வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணியை, இம்மாதம் 31-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், தகவல்கள் பதிவேற்றம் செய்யும் பணி, இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவடையும் என்றும் கூறினார்.முன்னதாக வாக்காளர் பட்டியலில் கூடுதல் விவரங்களை இணைக்க ஆதார் எண் கட்டாயம்எனவும், இல்லையெனில் பெயர் நீக்கப்படும் என்றும் மாவட்ட வாரியாக தேர்தல் அதிகாரிகள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி வந்தனர். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ்கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி