கலை, அறிவியல் பாடங்களில் சேர ஆர்வம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2015

கலை, அறிவியல் பாடங்களில் சேர ஆர்வம்

கலை, அறிவியல் படிப்புகளில் சேர, மாணவ, மாணவியரிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுஉள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 முடித்தவுடன், இன்ஜி., படிப்பில் சேர, மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டி வந்தனர்; சமீபகாலமாக, கலை படிப்புகள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது.வேலை வாய்ப்புநடப்பு கல்வியாண்டில், ஒருசில படிப்புகளில் சேர, நன்கு படிக்கும் மாணவ, மாணவியரே, கலை அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.

பி.எஸ்சி., கணிதம், பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, மவுசு ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளிவரும் முன்பே, அட்மிஷன் நடந்து வருகிறது.இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறியதாவது: பெரும்பாலான ஐ.டி., நிறுவனங்கள், தற்போது, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் பக்கம் திரும்பியுள்ளன. 

இவற்றை படிப்பதால், மூன்றே ஆண்டுகளில், வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள முடியும். இந்த ஆண்டில், பி.எஸ்சி., கணிதம் படிப்பின் மீது, அதிக ஆர்வம் உள்ளது. 

தனியார் பள்ளிகள் முதல், அரசு பள்ளிகள் வரை, ஏராளமான ஆசிரியர் வேலைவாய்ப்பு, இன்ஜினியரிங், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் கூட, கணிதம் பாடம் எடுக்க ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
மாணவர் சேர்க்கைஇதே போல், ஐ.டி., நிறுவனங்களும், கணிதம் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. ஆசிரியர் பணிக்கு செல்வோரின் அடுத்த சாய்ஸாக, பி.ஏ., ஆங்கிலம் உள்ளது; இப்படிப்புகளில், மாணவர்களை விடவும், மாணவியர் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால், தேர்வு முடிவ வெளிவரும் முன்பே, இப்பாடங்களில், சேர்க்கையும் நடந்துள்ளது.

அண்ணா பல்கலை மற்றும் அரசு இன்ஜி., கல்லுாரிகளில் சேர, 'கட் - ஆப்' மதிப்பெண் கிடைக்காது என, தெரிந்த பலரும், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளை நாட துவங்கி உள்ளனர்.ஆடிட்டராக, சி.ஏ., படிக்க வேண்டும் என, விரும்புபவர், பி.காம்., படிப்பில் சேர்கின்றனர். கடந்த ஆண்டுகளில் மவுசு இருந்த, பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேடிக்ஸ், பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட நுட்பமான படிப்புகளில், மாணவர் சேர்க்கை மிக அரிதாக உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி