தேர்வில் காப்பி அடித்ததாக மாட்டிய போலீஸ் ஐ.ஜி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2015

தேர்வில் காப்பி அடித்ததாக மாட்டிய போலீஸ் ஐ.ஜி.


கேரளாவில் சட்டத் தேர்வில் காப்பி அடித்ததாக போலீஸ் ஐ.ஜி. டி.ஜே. ஜோஷ் சிக்கினார்.கேரள மாநிலம் திருச்சூர் ஐ.ஜி.,யாக இருப்பவர் ஜோஸ். அங்குள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு (எல்.எல்.எம்.,) படித்து வந்தார். கொச்சி கலமச்சேரியிலுள்ள செயின்ட் பால்ஸ் கல்லூரியில் கிரைம் 2ம் தாள் தேர்வெழுதியஜோஸ், பிட் அடித்ததை தேர்வறை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தார்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் அளித்தார். கேரள ஐ.ஜி., ஒருவர் தேர்வில் பிட் அடித்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து பேசிய ஐ.ஜி., ஜோஸ், தான் பிட் அடிக்கவில்லை என்றும், நாளையும் தேர்வெழுத வருவேன் என்றார்.போலீஸ் ஐ.ஜி., ஒருவர் தேர்வில் பிட் அடித்து மாட்டிக் கொண்ட சம்பவம் கேரளாவுக்கும், கேரள போலீசுக்கும் மிகப்பெரிய தலைகுனிவு என அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார். மேலும், ஜோஸ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி